செய்திகள் மலேசியா
ஃபைசல் ஹலீம் மீது அமிலம் வீசிய வழக்கு; மேலும் ஒருவர் கைது: ஹுசைன் ஓமர் கான்
பெட்டாலிங் ஜெயா:
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோத்தா டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடியில் சிலாங்கூர் எஃப்சி கால்பந்து வீரர் ஃபைசல் ஹலிம் மீது அமிலம் வீசப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் மேலும் ஒரு நபரைக் காவல்துறையினர் கைது செய்ததாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.
அந்நபர் நேற்று பண்டார் பாரு பாங்கி பகுதியில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
30 வயதுடைய சந்தேக நபர் பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.
அதற்கு முன், இந்த சம்பவம் தொடர்பாக அம்பாங்கின் பாண்டன் இந்தாவில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, சம்பவத்தின் நோக்கத்தை அடையாளம் காண்பதுடன் மேலதிக விசாரணை வரை 20 வயதுடைய நபர் இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் ஃபைசல் ஹலிமிற்கு கழுத்து, தோள்பட்டை, கை, மார்பு என உடலின் பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 19, 2024, 5:53 pm
பேரின்பம் மலேசியா இயக்கம் மீண்டும் புத்துயிருடன் செயல்படும்: தாமோதரன்
May 19, 2024, 9:24 am
உலு திராம் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுவுக்கும் தொடர்பில்லை: ஐஜிபி
May 18, 2024, 7:24 pm
பிரபல நிறுவனத்திற்கு எதிரான வழக்கை திசை திருப்ப முயற்சி: ஓம்ஸ் தியாகராஜன்
May 18, 2024, 7:20 pm
செயற்கை நுண்ணறிவில் வங்கித் துறையும் ஆற்றல் பெற வேண்டும்: டத்தோ ரமணன்
May 18, 2024, 7:17 pm