நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உயர் பதவிகளிலிருப்பவர்களிடம் விசாரணை மேற்கொள்ள எம்ஏசிசி தயங்கக் கூடாது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

ஊழல் தொடர்பாக உயர் பதவி வகிப்பவர்களிடம் விசாரணை மேற்கொள்ள எம்ஏசிசி தயங்கக் கூடாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி உயர் பதவி, செல்வாக்கு மிக்க மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தும்போது தைரியமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

ஊழல்களை ஒழிக்கும் வண்ணமாக, எம்ஏசிசி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் அவர். 

எம்ஏசிசி குடும்பத்தின் மீது அரசுக்கு நம்பிக்கையுள்ளது. அதனால் யாரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தேசிய ஊழல் எதிர்ப்பு உத்தி (NACS) 2024-2028 இன் வெளியீட்டு விழாவில் அன்வார் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset