நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சூரிய சக்தி திட்ட வழக்கில் ஸ்ரீராமின் நியமனத்தை  சவால் செய்த ரோஸ்மா மனு நிராகரிப்பு 

கோலாலம்பூர்:

சூரிய சக்தி திட்டத்தின் ஊழல் வழக்கில், மறைந்த கோபால் ஸ்ரீ ராம் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து  கூட்டரசு நீதிமன்றத்தில் ரோஸ்மா மன்சூர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் மனைவி மேன்முறையீடு செய்ய அனுமதி கோரிய மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இன்று காலை நிராகரித்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ரோஸ்மா மேல்முறையீடு செய்தார்.

இது முன்னாள் கூட்டரசுப் பிரதேச நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராமை துணை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது என்று கூறியதை நீதித்துறை மறுஆய்வு செய்ய அனுமதி மறுத்தது.

மேல் முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பை உறுதி செய்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset