நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்க பேச்சாளராக இருந்தாலும் மக்களின் குரலாக விளங்குவேன்: ஃபாஹ்மி

கோலாலம்பூர்:

அரசாங்கத்தின் பேச்சாளராக இருந்தாலும் மக்களின் குரலாக அமைச்சரவையில் விளங்குவேன்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தமிழ் ஊடங்களுடனான சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் எதிராக பல குறைபாடுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்திய சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளாதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும அரசாங்கம் கண்டுக் கொள்ளாமல் இல்லை. அனைத்தையும் கண்காணித்து தான் வருகிறது.

அதேவேளையில் தம்மை அரசாங்கத்தின் பேச்சாளர் என்று கூறுகின்றனர்.

அரசாங்கத்தின் பேச்சாளராக இருந்தாலும் மக்களின் குரலாக நான் விளங்குவேன்.

மக்களிடையே எழும் பிரச்சினைகளை அரசாங்கத்தின் பார்வைக்கு நிச்சயம் கொண்டு செல்வேன் என்று ஃபாஹ்மி கூறினார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் மீது இந்திய சமுதாயம் மிகப் பெரிய நம்பிக்கையை கொண்டுள்ளனர்.

இந்த நம்பிக்கையை அவர்கள் இழந்து விடக் கூடாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset