நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீரை கைது செய்வது எம்ஏசிசியின் நோக்கம் அல்ல: அஸாம் பாக்கி

புத்ராஜெயா:

முன்னாள் பிரதமர் துன் மகாதீரை கைது செய்வது எம்ஏசிசியின் நோக்கம் அல்ல.

அதன் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.

சொத்து அறிவிப்பு விவகாரம் தொடர்பாக மகாதீரை இனி கைது செய்ய எம்ஏசிசி விரும்பவில்லை.

இருந்தாலும் அவருக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புத்ராஜெயா நடந்த தேசிய ஊழல் எதிர்ப்பு வியூகம் 2024-2028ஐ அறிமுகப்படுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

முன்னதாக கடந்த ஏப்ரல்  25ஆம் தேதி சொத்துப் பிரகடனப் பிரச்சினை தொடர்பாக விசாரிக்கப்படும் நபர்களில் துன் மகாதீரும் இருப்பதாக  அசாம் பாக்கி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset