செய்திகள் மலேசியா
கோப்ரல் சத்தியராஜ் ஜீவன் கொலை வழக்கில் ஐவர் கைது: ஹுசைன் ஓமார் கான்
ஷாஆலம்:
கோப்ரல் சத்தியராஜ் ஜீவன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஐவரை போலீசார் கைது செய்துள்ளர்.
இதனை சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் உறுதிப்படுத்தினார்.
காஜாங்கின் தாமான் இம்பியான் இண்டா பாலகோங்கில் கும்பலால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் அதிகாரி மரணமடைந்தார்.
இக் கொலை சம்பவம் தொடர்பில் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணைக்கு உதவும் வகையில் அவர்கள் அனைவரும் ஒரு வாரக் கால தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தலையில் பலத்த அடிபட்டதன் காரணமாக போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
இதனிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு கோப்ரல் சத்தியராஜ் ஜீவன் உடல் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தலாம்: பிரதமர்
May 4, 2024, 1:51 pm