நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோப்ரல் சத்தியராஜ் ஜீவன் கொலை வழக்கில் ஐவர் கைது: ஹுசைன் ஓமார் கான்

ஷாஆலம்:

கோப்ரல் சத்தியராஜ் ஜீவன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஐவரை போலீசார் கைது செய்துள்ளர்.

இதனை சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் உறுதிப்படுத்தினார்.

காஜாங்கின் தாமான் இம்பியான் இண்டா பாலகோங்கில் கும்பலால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் அதிகாரி மரணமடைந்தார்.

இக் கொலை சம்பவம் தொடர்பில் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்ட ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணைக்கு உதவும் வகையில் அவர்கள் அனைவரும் ஒரு வாரக் கால தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தலையில் பலத்த அடிபட்டதன் காரணமாக போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

இதனிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு கோப்ரல் சத்தியராஜ் ஜீவன் உடல் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset