நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்லாஹ் காலுறை விவகாரத்தில் இரு ஆடவர்களை மிரட்டிய கும்பல் மீது நடவடிக்கை: ஜி25 அமைப்பு வலியுறுத்து

கோலாலம்பூர்:

முகநூலில் அல்லாஹ் காலுறை  விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த இரு நபர்களை மிரட்டியதாகக் கூறப்படும் தனிநபர் கும்பலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் அரசாங்க உயர் அதிகாரிகளைக் கொண்ட ஜி25 அமைப்பு இதனை வலியுறுத்தியது.

அமைதி, நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலான பிரச்சினைகள் எழும் போது அரசாங்கம் தலைமைத்துவத்தைக் காட்ட வேண்டும்.

பிரச்சினையை மோசமாக்கக்கூடிய அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஜி25 அமைப்பு அரசியல்வாதிகளை வலியுறுத்தியது.

அரசு தலைமை தாங்கி, இந்தப் பிரச்சினையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு உடனடியாக உறுதியளிக்க வேண்டும்.

பொறுப்பற்ற அரசியல்வாதிகள் இந்த சம்பவத்தை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கப்பட வேண்டும் என்று ஜி25 அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset