செய்திகள் மலேசியா
தஞ்சோங் மாலிமில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது: 2 பேர் உயிர் தப்பினர்
சுங்கை:
தஞ்சோங்மாலிம் நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் 2 பேர் உயிர் தப்பினர்.
செஸ்னா 172 எனும் இலகு ரக விமானம் சுங்காய் அருகே உள்ள தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் ஒரு விமானப் பயிற்றுவிப்பாளரும் பயிற்சியாளரும் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து இன்று காலை 9.46 மணிக்கும் மலேசிய தீயணைப்பு மீட்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
உடனே தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
லாயாங் லாயாங் ஃபிளையிங் அகாடமியின் செஸ்னா 172 இலகு ரக விமானம் இப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கிய பயிற்சியாளரான கேப்டன் ஷாருல் இம்ரான், பயிற்சியாளர் 20 வயதான லீ ஹோ ஜியா ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்று தீயணைப்புப் படை பேச்சாளர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2024, 3:53 pm
மலேசியா பாதுகாப்பான நாடு என்றாலும் பாதுகாப்பில் கவனம் தேவை: ஸாஹித் ஹமிடி
May 18, 2024, 3:20 pm
ஜூலை 1 முதல் பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை வழங்கப்படும்: ஃபஹ்மி பட்சில்
May 18, 2024, 2:53 pm
இந்திய சமூக திட்டங்களை கண்காணிக்க சிறப்பு குழு தேவையில்லை: டத்தோ ரமணன்
May 18, 2024, 1:57 pm
ஜொகூரில் ஜெமா இஸ்லாமியா அமைப்பில் 20 உறுப்பினர்கள்: ரஸாருடின் தகவல்
May 18, 2024, 1:34 pm
எல்.பி.டி 2 நெடுஞ்சாலையில் நடந்த சாலை கோர விபத்தில் ஒருவர் மரணம்; மூவர் படுகாயம்
May 18, 2024, 12:58 pm
மலேசியாவில் ஜமாஹா இஸ்லாமிய இயக்கத்தின் செயல்பாடு கட்டுப்பாட்டில் உள்ளது: சைபுடின்
May 18, 2024, 12:56 pm
மலேசியாவில் ஜெ.ஐ இயக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது: உள்துறை அமைச்சு
May 18, 2024, 11:39 am