நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தஞ்சோங் மாலிமில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது: 2 பேர் உயிர் தப்பினர்

சுங்கை:

தஞ்சோங்மாலிம் நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில்  2 பேர் உயிர் தப்பினர்.

செஸ்னா 172 எனும் இலகு ரக விமானம் சுங்காய் அருகே உள்ள தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் ஒரு விமானப் பயிற்றுவிப்பாளரும் பயிற்சியாளரும் உயிர் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து இன்று காலை 9.46 மணிக்கும் மலேசிய தீயணைப்பு மீட்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

உடனே தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

லாயாங் லாயாங் ஃபிளையிங் அகாடமியின் செஸ்னா 172 இலகு ரக விமானம் இப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கிய பயிற்சியாளரான கேப்டன் ஷாருல் இம்ரான், பயிற்சியாளர் 20 வயதான லீ ஹோ ஜியா ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்று தீயணைப்புப் படை பேச்சாளர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset