நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய, சீன வாக்காளர்களின் ஆதரவு குறித்து தெளிவான அறிகுறி இல்லை: கைரூல் அஸ்ஹாரி

உலுசிலாங்கூர்:

கோல குபு பாருவில் இந்திய, சீன வாக்காளர்களின் ஆதரவு குறித்து இன்னும் தெளிவான அறிகுறி இல்லை.

தேசியக் கூட்டணி வேட்பாளர் கைரூல் அஸ்ஹாரி சவுத் இதனை தெரிவித்தார்.

கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் வாக்களிக்க 40,226 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் 36 சதவீதம் பேர் சீன, 18 சதவீதம் இந்திய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறேன்.

ஆனால் அவர்களின் ஆதரவு குறித்து தெளிவான அறிகுறிகள் தென்படவில்லை.

மேலும் வாழ்வாதார பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு அவர்களின் ஆதரவு இருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset