நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலுறை பிரச்சினையை அரசியல் லாபத்திற்காக  பயன்படுத்துவதை நிறுத்துங்கள்: அமீர் அலி

கோலாலம்பூர்:

அல்லாஹ் காலுறை பிரச்சினையை அரசியல் லாபத்திற்காக  பயன்படுத்துவதை அனைத்து தரப்பினரும் நிறுத்த வேண்டும்.

மைடின் பேரங்காடியின் உரிமையாளர் டத்தோ வீரா அமீர் அலி இதனை தெரிவித்தார்.

அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மால் சாலேவை இந்த விவகாரத்தை தொடர்ந்து சர்ச்சையாக்கி வருகிறார்.

அரசியல் கட்சிகள் 3ஆர் எனப்படும்  இனம், மதம், ஆட்சியாளர் பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

நாம் நெருப்பில் எண்ணெயை ஊற்றக்கூடாது.

இந்த விவகாரத்தில் கேகே மார்ட்  பகிரங்கமாக மன்னிப்பு கோரியது.

இருந்தாலும் அக்மால் கேகே மார்ட்டை  புறக்கணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார்.

இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும், 

தொழிலாளர்களில் பெரும்பான்மையான மலாய் -முஸ்லிம்கள் என்று அவர் நினைவுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset