செய்திகள் இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை காவல் விசாரணை
புதுடில்லி:
பணமோசடி வழக்கில் கைதான டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதையடுத்து இரவு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே, டில்லி மதுபான கொள்கை வழக்கில் டில்லி முன்னாள் துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என நீண்ட காலமாக தகவல் பரவி வந்தது.
இந்நிலையில் மார்ச் 21 ஆம் தேதி இரவு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தேர்தல் நெருங்கி வரும் பரபரப்பான சூழலில், கெஜ்ரிவாலுக்கு 9ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
கைது செய்வதில் இருந்து பாதுகாப்பு அளிக்க கோரி மனுதாக்கல் செய்தார். ஆனால் டில்லி உயர் நீதிமன்றம், கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.
இதையடுத்து கெஜ்ரிவால் இரவு கைது செய்யப்பட்டார். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ள தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அமலாக்கத்துறை சார்பில் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து 6 நாட்கள் (மார்ச் 28 வரை) நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am