நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விடுதியில் மாணவர் இறந்து கிடந்தார்: 13 சக மாணவர்கள் கைது

லாஹாட் டத்து:

விடுதி அறையில் மாணவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து 13 சக மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் இன்று காலை சபாவின் லாஹாட் டத்துவில் உள்ள தொழிற்கல்லூரியின் தங்கும் விடுதியில் நிகழ்நதது.

17 வயது மாணவன் உடலில் பல இடங்களில் காயங்களுடன் தரையில் கிடந்ததாக லாஹாட் காவல்துறைத் தலைவர் டத்து ரோஹன் ஷா அஹ்மட் தெரிவித்தார்.

காலை 6.50 மணியளவில் விடுதி அறையில் மயங்கிய நிலையில் இருந்த ஆண் மாணவனைக் கண்டு கல்லூரியின் இயக்குநர் புகார் அளித்தார்.

அவசர சிகிச்சை அளித்த மருத்துவ அதிகாரி, பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதை பின்னர் உறுதிப்படுத்தினார்.

மரணமடைந்தவருக்கும் விடுதியில் வசிக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதலின் விளைவாகவே இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset