நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 லட்சம் ரிங்கிட்டுடன் பெட்டியை ஒப்படைத்த  பாதுகாவலருக்கு விருது

பெட்டாலிங்ஜெயா:

500,000 ரிங்கிட் ரொக்கம் கொண்ட பயணப் பெட்டியை  திருப்பிக் கொடுத்த பாதுகாப்புக் காவலர், அவரது நேர்மைக்காக தனது முதலாளியின் பாராட்டைப் பெற்றார்.

39 வயதான அவருக்கு அவரது நிறுவனமான ஏ5 செக்யூரிட்டி சர்வீசஸ் விருதும் பரிசும் வழங்கியது.

அவர் நிலைமையைக் கையாண்ட விதம், பின்பற்றப்பட்ட நடைமுறைகளுக்காக தாவாவைப் பற்றி நிறுவனம் மிகவும் பெருமைப்படுகிறது.

அந்நிறுவனத்தின் இயக்குநர் ஹர்தீப் சிங் இதனை கூறினார்.

அவருடைய நேர்மையை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். 

பெட்டிக்குள் இருந்த பெரிய தொகையை திருப்பி ஒப்படைத்துள்ளார். அவர் அவ்வாறு செய்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், 

அதனால் தான் நாங்கள் அவருக்கு இன்று வெகுமதி அளிக்கிறோம் என்று ஹர்தீப் இங்கே செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset