நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இலங்கையில் 5000 பேருடன் பிரம்மாண்ட நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டத்தோஸ்ரீ சரவணன்

காத்தான்குடி:

இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடியில் 5000 பேர் பங்குகொண்ட மாபெரும்  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் ம இ கா வின் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம் சரவணன் கலந்துகொண்டார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடியில் இந்த நிகழ்ச்சி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டத்தோஸ்ரீ எம். சரவணன் தமக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் உள்ள பாரிய உறவு குறித்து உரையாற்றினார்.

May be an image of 1 person, dais and text

May be an image of 2 people, dais and text

மனங்களை ஒருங்கிணைக்கும் இது போன்ற மத நல்லிணக்க நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்த ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு தமது பாராட்டுகளையும் முஸ்லிம்களுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார். 

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் எம். யூ எம் முஹம்மது அல் சப்ரியும் கலந்துகொண்டார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset