நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டோல் கட்டணத்தை ரத்து செய்வதால் அரசுக்கு நிதி நெருக்கடிகள் ஏற்படும்: அஹம்மத் மஸ்லான் 

கோலாலம்பூர்:

டோல் கட்டண முறையை ரத்து செய்வது நாட்டிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். அதனால் அத்திட்டத்தை அமல்படுத்துவது எளிதான விஷயமல்ல என்று பொதுப்பணித் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ அஹம்மத் மஸ்லான் கூறினார்.

நாட்டில் டோல் கட்டண முறையை ரத்து செய்யும் பரிந்துரையை அமல் செய்யும் பட்சத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுக்கு 45,000 கோடி வெள்ளி வரை இழப்பீடு வழங்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்படும் என்று அவர் சொன்னார்.

டோல் கட்டண முறையை ரத்து செய்யும் பட்சத்தில் நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுக்கு 40,000 கோடி வெள்ளி வரை இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கடந்த 2019-ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்டது.

தற்போது இந்த இழப்பீட்டின் மதிப்பு இன்னும் உயர்ந்து 45,000 கோடி வெள்ளியாக ஆகியிருக்கும் என்றார் அவர்.

நாட்டின் வருடாந்திர வரவு செலவுத் திட்டம் 38,800 கோடி வெள்ளியை உள்ளடக்கியது.

45,000 கோடி வெள்ளி மதிப்பிலான டோல் கட்டண முறையை ஓராண்டு காலத்தில் ரத்து செய்தால் சம்பளம் வழங்குவதற்கும் இதர தேவைகளுக்கும் செலவிட நம்மிடம் பணம் இருக்காது.

ஆகவே, டோல் கட்டணம் ரத்து செய்யப்படும் எனத் தாம் கருதவில்லை என்றார் அவர்.

மக்களவையில் நேற்று 2023-ஆம் ஆண்டுக்கான மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட திருத்தப்பட்ட மசோதா மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெருநாள் காலங்களில் இலவச டோல் கட்டணச் சலுகையை வழங்கும் நடைமுறை காரணமாக அரசாங்கம் நாளொன்றுக்கு 2 கோடி வெள்ளியை நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்குகிறது என்றத் தகவலையும் மஸ்லான் வெளியிட்டார்.

அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளின் போதும் இலவச டோல் கட்டணச் சலுகையை அரசாங்கம் வழங்குவதற்குரிய சாத்தியம் உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset