நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அல்லாஹ் காலுறை தொடர்பான விசாரணை நிறைவு பெற்றது: புக்கிட் அமான்

கோலாலம்பூர்:

அல்லாஹ் என்ற வார்த்தையுடன் காலுறைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைகளை காவல்துறை பூர்த்தி செய்துள்ளது.

இதனை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு பிரிவு இயக்குநர் டத்தோஶ்ரீ முஹம்மத் சுஹைலி உறுதிப்படுத்தினார்.

இரண்டு விசாரணை அறிக்கைகள் தேசிய சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த நடவடிக்கை குறித்து சட்டத்துறை தலைவர்  அறிவுறுத்தல்களுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.

இரண்டு விசாரணை ஆவணங்களில் கேகே மார்ட், காலுறை இறக்குமதி செய்த விநியோக நிறுவனம் ஆகியவை குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298ஏ பிரிவின்கீழ் விசாரணை நடத்தப்பட்டன.

தற்போது விசாரணைகள் முழுமைப் பெற்று அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது என்று புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset