நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நைமாவின் கடப்பிதழ் கோரும் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்தது

கோலாலம்பூர்:

துன் டாய்ம் மனைவி நைமா காலிட்டின் கடப்பிதழ் கோரும் விண்ணப்பத்தை உயர் நீடிமன்றம் இன்று நிராகரித்தது.

மனுவை நிராகரித்த நீதிபதி அகமது பாச்சே, 

விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் பயண ஆவணங்களை ஒப்படைக்க நைமாவிற்கு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டதில் தவறில்லை என்றார்.

250,000 ரிங்கிட் பிணைத் தொகைக்கு மேலதிகமாக அவரது பிணை நிபந்தனைகளின் ஒரு பகுதியாக அவரது கடப்பிதழ் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 23ஆம் தேதி நைமா காலித் மீது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் எம்ஏசிசியின் சொத்து அறிவிப்புக்கு இணங்கத் தவறிய குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset