நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மனிதவள அமைச்சின் ஆசியான் வேலை வாய்ப்பு மாநாடு, கண்காட்சி: ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது

புத்ராஜெயா:

மனிதவள அமைச்சின் ஆசியான் வேலை வாய்ப்பு மாநாடு, கண்காட்சி வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது.

இதனை அவ்வமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக அறிவித்துள்ளது.

ஆசியான் கிரீன் வேலை வாய்ப்பு மாநாடு வரும் ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் கோலாலம்பூர் ஈகியூ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலிய அரசாங்கம் உட்பட பல நிறுவனங்கள், அமைப்புகள் ஆதரவில் இது நடைபெறவுள்ளது.

ஆசிய ரீதியில் பொருளாதார வளர்ச்சி, நிலையான சூழலின் தேவைகளுக்கு ஏற்ப பசுமை வேலைகளை மேம்படுத்துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதே வேளையில் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோ மைபியூட்சர் கிரீன் வேலை வாய்ப்பு கண்காட்சியையும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கண்காட்சி வரும் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை கோலாலம்பூர் அவினியூ கேவில் நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட 3 ஆயிரம் வேலை வாய்ப்புகளை இந்த கண்காட்சி உள்ளடக்கியுள்ளது.

ஆகவே வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மனிதவள அமைச்சு கேட்டுக் கொண்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset