செய்திகள் மலேசியா
மனிதவள அமைச்சின் ஆசியான் வேலை வாய்ப்பு மாநாடு, கண்காட்சி: ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது
புத்ராஜெயா:
மனிதவள அமைச்சின் ஆசியான் வேலை வாய்ப்பு மாநாடு, கண்காட்சி வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது.
இதனை அவ்வமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக அறிவித்துள்ளது.
ஆசியான் கிரீன் வேலை வாய்ப்பு மாநாடு வரும் ஏப்ரல் 24, 25ஆம் தேதிகளில் கோலாலம்பூர் ஈகியூ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய அரசாங்கம் உட்பட பல நிறுவனங்கள், அமைப்புகள் ஆதரவில் இது நடைபெறவுள்ளது.
ஆசிய ரீதியில் பொருளாதார வளர்ச்சி, நிலையான சூழலின் தேவைகளுக்கு ஏற்ப பசுமை வேலைகளை மேம்படுத்துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதே வேளையில் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோ மைபியூட்சர் கிரீன் வேலை வாய்ப்பு கண்காட்சியையும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த கண்காட்சி வரும் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை கோலாலம்பூர் அவினியூ கேவில் நடைபெறவுள்ளது.
கிட்டத்தட்ட 3 ஆயிரம் வேலை வாய்ப்புகளை இந்த கண்காட்சி உள்ளடக்கியுள்ளது.
ஆகவே வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மனிதவள அமைச்சு கேட்டுக் கொண்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 6:11 pm
பாங்கின் கல்வித் தேர்ச்சி குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியின் நோக்கம் என்ன?: தியோ நீ சிங்
April 29, 2024, 6:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினையை மாநில அரசு கைவிடவில்லை: பாப்பாராயுடு
April 29, 2024, 6:08 pm
மக்கள் பிரச்சினைகளில் மலேசிய மக்கள் சக்தி கட்சி கவனம் செலுத்தும்: டத்தோஶ்ரீ தனேந்திரன்
April 29, 2024, 6:07 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதி. குமணன் நினைவு விழா 2024
April 29, 2024, 5:39 pm
ஓப்ஸ் பகார் லாவுட் சோதனை நடவடிக்கை: 178 கைது, 15 மில்லியன் வெள்ளி பறிமுதல்: சைஃபுடின்
April 29, 2024, 5:24 pm
உலக வங்கியின் அறிக்கை குறித்து விளக்கமளிப்பதை கல்வியமைச்சர் தவிர்த்துள்ளார்
April 29, 2024, 5:23 pm
போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட காதலர் ஜோடி கைது
April 29, 2024, 5:20 pm
கால்நடைகள் கடத்தப்படும் நடவடிக்கைகள் முறியடிக்கப்படும்: மாட் சாபு
April 29, 2024, 3:21 pm