நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரோந்து காரை பார்த்து தப்பி ஓட முயன்ற  3 பேரை போலீசார் கைது செய்தனர்

பாசிர் மாஸ்:

போலீஸ் ரோந்து காரை பார்த்து தப்பி ஓட முயன்ற  3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பாசிர் மாஸ் கம்போங் கெடோன்டோங்கில் இரவு 7.35 மணிக்கு நிகழ்ந்தது.

அப்பகுதியில் வழக்கமான குற்றத் தடுப்பு ரோந்துப் பணியின் போது, சாலையோரம் சந்தேகத்திற்கிடமான வகையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டுள்ளனர்.

போலீசார கண்டதும் அக்கார் ஓட்டுநர் திடீரென வேகமாக புறப்பட்டார்.

ஆனால் அடுத்த வளைவில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததது.

இதனால் உள்ள வீடொன்றின் மீது மோதி அக்கார் விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 36 முதல்  41 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் போலீசார் கைது செய்தனர் என்று பாசிர்மாஸ் போலீஸ் தலைவர் கமா அஸாருல் முகமத் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset