நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொள்ளையடிக்கப்பட்ட தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது: அலாவூதீன்

கோலாலம்பூர்:

கொள்ளையடிக்கப்ப தங்கக் கட்டிகள் அடங்கிய பெட்டியை போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இதனை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவூதின் அப்துல் மஜித் உறுதிப்படுத்தினார்.

ஆடவர் ஒருவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஒரு ஆண், 3 பெண்கள் என நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அவர்களை பத்து பகாட்டில் கைது செய்து வங்சாமாஜூ போலீஸ் தலைமையகத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஆடவர்  தீயணைப்புப்படை, காவல்துறையினரை செவ்வாய்க்கிழமை பத்து பகாட்டில் உள்ள சுங்கை செம்ப்ராங்கிற்கு அழைத்துச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து அடிவாரத்தில் மறைத்து வைக்கப்பட்ட 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நான்கு தங்கக் கட்டிகளை போலீசார் மீட்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset