நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர் உருமாற்றம் தொடர்பில் மீண்டும் ஆய்வுகளா? மஇகாவின் புளூபிரிண்ட் என்னவானது: டத்தோ நெல்சன் கேள்வி

கோலாலம்பூர்:

இந்தியர் உருமாற்றம் தொடர்பில் மீண்டும் மீண்டும் ஆய்வுகள் நடத்தப்படுவது நேர விரயம் என்று செனட்டர் டத்தோ நெல்சன் கூறினார்.

மித்ராவின் வாயிலாக இந்திய சமுதாய உருமாற்றத்திற்கான புதிய ஆய்வுகள் நடத்தப்படும்.

பல தரப்பினருடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் ஏரன் அகோ கூறியுள்ளார்.

இந்திய சமுதாயத்தின் உருமாற்றம் என்ற அடிப்படையிக் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையில் மஇகாவின் முயற்சியில் புளூபிரிண்டும் தயாரிக்கப்பட்டது.

அந்த புளூபிரிண்ட் என்னவானது என்பது தான் என்னுடைய கேள்வியாகும்.

ஏற்கெனவே இந்திய சமுதாயம் குறித்து பல ஆய்வுகள் நடந்துள்ள நிலையில் புதியதாக ஆய்வுகள் தேவையா.

இந்த கேள்விக்கு அமைச்சர் ஏரன் அகோ உரிய பதிலை தர வேண்டும் என டத்தோ நெல்சன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset