நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்லாமை கொச்சைப்படுத்தும் வர்த்தகர்களை மலாய்க்காரர்கள் புறக்கணிப்பார்கள்: அக்மால்

ஜாசின்:

மலாய்க்காரர்கள், முஸ்லிம்கள் அல்லாஹ்வை அவமதிக்கும் எந்த வணிக நிறுவனத்தையும் புறக்கணிக்க அழைக்கும் தனது நிலைப்பாட்டில் இருந்து விலகப் போவதில்லை.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் முஹம்மத்  அக்மல் சாலே இதனை கூறினார்.

மதம், மலாய் இனத்தை அவமதிக்கும் கேவலமான நடத்தை மூலம் முஸ்லிம் கோபத்தின் தீப்பிழம்புகளை வேண்டுமென்றே தூண்டப்படுகிறது.

இது சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எந்த சமரசமும் இல்லை என்று அவர் கூறினார்.

இந்த நாட்டிலுள்ள மலாய்க்காரர்கள், முஸ்லிம்களின் குரலை நான் கொண்டு வருகிறேன். 

கேகே மார்ட்டை புறக்கணிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கிய அம்னோ இளைஞர்களின் செயல்களைப் பற்றி விவாதிக்க எனக்கு பல அழைப்புகள் வந்தன.

நான் அதை கண்டுக் கொள்ளவில்லை. மாறாக எனது போராட்டத்தை தொடர்வேன். 

குறிப்பாக மலாய்க்காரர்கள் புறக்கணிப்பதை யாரும் தடுக்க வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset