செய்திகள் மலேசியா
வெயில் காலத்தில் விளையாட்டு உடைகளை அணியக் கல்வியமைச்சு அனுமதி
புத்ராஜெயா:
கடுமையான வெயில் காலத்தில் போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் விளையாட்டு உடைகளை அணியக் கல்வியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது.
வெப்பமான காலநிலையின் போது கல்வியமைச்சு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நலன்களின் அக்கறை கொண்டுள்ளது.
பள்ளிகள் அந்தந்தப் பகுதிகளில் வெப்பமான காலநிலை நிகழ்வுகள் குறித்து ஊடகங்கள் மூலம் தற்போதைய முன்னேற்றங்களை அறிந்திருக்க வேண்டும்.
பள்ளிகள் அனைத்து உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த அவ்வப்போது அதிகாரிகளின் பரிந்துரைகளுக்கு இணங்க வேண்டும்.
பள்ளி நிர்வாகம் எப்போதும் கல்வியமைச்சு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வெப்பநிலை அதிகமாகயிருந்தால் மாவட்டக் கல்வி இலாகா, மாநிலக் கல்வி இலாகா ஆகிய கீழ் இயங்கும் பள்ளி பகுதிகளில் வெப்ப நிலை அதிகமாக இருப்பின் புறப்பாட நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம்.
மேலும், மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும், சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகள் போதுமான சுத்தமான குடிநீர் இருப்பதை உறுதி செய்யவும் வெப்பமான காலநிலையில் மாணவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த தகுந்த அளவில் குடிநீர் எடுக்க அறிவுறுத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 4:50 pm
வேலையில்லா பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது: சிவநேசன்
May 5, 2024, 11:26 am
தகாத முறையில் பேசியதற்காக வருந்துகிறேன்: பிரதமர் முன்னிலையில் மன்னிப்பு கோரினார் சனுசி
May 5, 2024, 10:47 am
கெடாவில் கடும் ஏழைகளின் எண்ணிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க 2 மாதம் அவகாசம்: பிரதமர்
May 5, 2024, 10:32 am
பெட்ரோல், டீசல் விலை உயரும் எனும் அந்நிய நாட்டு ஊடகத்தின் செய்தி தவறானது: ஃபஹ்மி
May 4, 2024, 6:19 pm