நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிலிப்பைன்ஸ் இணைய மோசடி மையத்தில் இருந்து 8 மலேசியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் மீட்பு

கோலாலம்பூர்:

பிலிப்பைன்ஸில் உள்ள இணைய மோசடி மையத்தில் நேற்று விடியற்காலை நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டனர்.

இதில் எட்டு பேர் மலேசியர்கள் என்று போலீசார் உறுதிப்படுத்தினர்.

மணிலாவின் வடக்கே உள்ள வளாகத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறிய ஒரு வியட்நாமிய நபர் வழங்கிய தகவலில் அடிப்படையில்,

மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு இணைய மோசடிகளுக்கு தள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரொமான்ஸ் மோசடி, காதல் மோசடி, கிரிப்டோகரன்சி மோசடிகள் உட்பட பிற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர் என்று இந்த சோதனைக்கு தலைமை தாங்கிய குற்றப் பணிக்குழுவின் நிர்வாக இயக்குனர் கில்பர்டோ குரூஸ் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களின் கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டது. அதனால் அவர்களால் வெளியேற முடியவில்லை என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset