நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் கால்பந்து அணியின் விளையாட்டாளர் ஒப்பந்தத்தில் தலையிடுகிறேனா :அமினுடின் ஹருண் மறுப்பு

பெட்டாலிங் ஜெயா: 

நெகிரி செம்பிலான் கால்பந்து அணியின் விளையாட்டாளர் ஒப்பந்த விவகாரத்தில் ஒருபோதும் தலையிட்டதில்லை என்று நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருண் கூறினார். 

தமக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக அமினுடின் ஹருண் தெரிவித்தார். இந்நிலையில் தமக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்காதீர்கள். ரமலான் மாதத்தில் சில பொறுப்பற்ற தரப்பினர் இவ்வாறு நடந்துக்கொள்வது என்பது ஏற்புடையதாக இல்லை என்றும் சொன்னார். 

மாநில காற்பந்து அணியின் தரத்தை உயர்த்தவும் காற்பந்து துறை மேம்பாடு அடையவும் மாநில அரசாங்கம் சில ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக, நெகிரி செம்பிலான் ஆட்டக்காரர் ஸக்குவானின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை என்று காரணத்தை முன்வைத்து அவர் தமது ஓய்வினை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset