நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரு வீடுகளில் தீ விபத்து: மூதாட்டி பரிதாபமாக மரணம் 

கோலாலம்பூர்:

இன்று அதிகாலை சிலாங்கூர் யூ.எஸ்.ஜே 4- இல் இரு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி மரணடமைந்ந்துள்ள நிலையில் அவரின் கணவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளார்.

தீ விபத்து குறித்து அதிகாலை 1.15 மணிக்குத் தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாக சுபாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தலைவர் ஷம்சுல் அபிடின் தெரிவித்தார். 

சுபாங், பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து ஐந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

இந்தத் தீ விபத்தில் 60% வீடு தீயினால் நாசமானது. அவர்களின் காரும் தீயால் சேதமடைந்தது. 

சம்பந்தப்பட்ட கணவனும் மனைவியும்  70 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

தீயணைப்புப் படையினரால் அம்மூதாட்டி வீட்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டாலும் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நள்ளிரவு 1.40 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ஷம்சுல் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset