செய்திகள் மலேசியா
இரு வீடுகளில் தீ விபத்து: மூதாட்டி பரிதாபமாக மரணம்
கோலாலம்பூர்:
இன்று அதிகாலை சிலாங்கூர் யூ.எஸ்.ஜே 4- இல் இரு வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி மரணடமைந்ந்துள்ள நிலையில் அவரின் கணவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகியுள்ளார்.
தீ விபத்து குறித்து அதிகாலை 1.15 மணிக்குத் தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாக சுபாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தலைவர் ஷம்சுல் அபிடின் தெரிவித்தார்.
சுபாங், பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து ஐந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
இந்தத் தீ விபத்தில் 60% வீடு தீயினால் நாசமானது. அவர்களின் காரும் தீயால் சேதமடைந்தது.
சம்பந்தப்பட்ட கணவனும் மனைவியும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
தீயணைப்புப் படையினரால் அம்மூதாட்டி வீட்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டாலும் அவர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நள்ளிரவு 1.40 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ஷம்சுல் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 12:10 am
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
May 1, 2024, 12:08 am
கடின உழைப்பை மூலதனமாகக் கொண்டு வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
May 1, 2024, 12:07 am
நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடும் தொழிலாளர்களை மதிப்போம்: டத்தோ ரமணன்
May 1, 2024, 12:02 am
ஆலயங்களில் பஜன் குழுவை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
April 30, 2024, 9:36 pm
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணனின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு
April 30, 2024, 4:38 pm
3.3 மில்லியன் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக நீர் நிறுவனத்தின் 2 அதிகாரிகள் கைது
April 30, 2024, 4:14 pm