நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேருந்து, செம்பனை லோரி மோதி விபத்து: 2 சுற்றுலா பயணிகள் மரணம்

தாவாவ்:

பேருந்து, செம்பனை லோரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 சுற்றுலா பயணிகள் மரணமடைந்தனர்.

இந்த விபத்து ஜாலான் செம்பூர்னா - தாவார் செல்லும் சாலையில் நிகழ்ந்தது.

சிங்கப்பூரைச் சேர்ந்த லீ சியோங் ஹுவாட் (வயது 60), வியட்நாமைச் சேர்ந்த எங டிரின் பூ (வயது 40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

அவர்களின் மரணத்தை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்று செம்பூர்னா தீயணைப்பு படைத் தலைவர் மஸ்லான் சர்மான் கூறினார்.

மாலை 4.03 மணியளவில் இவ்விபத்து குறித்து தகவல் கிடைத்தது. உடனே தீயணைப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த லோரிய சுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் லோரி ஓட்டுநரான 25 வயது இளைஞருக்கு காயம் ஏற்படவில்லை.

மேலும் சம்பவத்தில் கடுமையாக காயமடைந்த மூன்று பேர் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset