நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு மாதம் முழுவதும் வழக்கம் போல்  பள்ளிகளில் சிற்றுண்டிகள் திறந்திருக்கும்: ஃபாட்லினா

கோலாலம்பூர்:

நோன்பு மாதம் முழுவதும் பள்ளி சிற்றுண்டிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சிடேக் தெரிவித்தார்.

அதே வேளையில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் ஒருவரையொருவர் மதிக்கும் வகையில் முஸ்லிம் நண்பர்கள் செய்யும் வழிபாட்டைப் புரிந்துக் கொள்வது முக்கியம்.

பள்ளிகளில் சிற்றுண்டிகள் கட்டாயம் திறந்திருக்க வேண்டும்.

இரண்டாவது, முஸ்லிம் அல்லாத குழந்தைகளைக் கொண்ட பள்ளிகளில் மற்ற இனங்களின் நம்பிக்கை தொடர்பான கல்வியின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

எனவே ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கும் மரியாதை செய்வதற்கும் கல்வி செயல்முறை மிகவும் முக்கியமானது.

2024/25 பள்ளி தவனை தொடக்க நிகழ்வுக்கு பிம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset