நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தடுப்பு ஊசி விவகாரத்தில் தமிழ்ப் பெண்களிடையே விழிப்புணர்வு வேண்டும்: குணராஜ்

கிள்ளான்:

செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தலைமையில் கர்ப்பப் பை வாய் புற்று நோய் தடுப்பு ஊசி முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

3 வயது முதல் 20 வயதிக்கும் இடை பட்ட மகளிருக்கு இலவச தடுப்பு ஊசி முகாம் நடை பெற்றது. இம்முகாமில் 300 மகளிருக்கு தடுப்பு ஊசி போடப் பட்டது.

பெண்கள் வயதான போது கர்ப்பபை வாய் புற்று நோய் வராமல் தடுக்கவே இந்த தடுப்பு ஊசி போடப்படுகிறது. 

இந்த தடுப்பு ஊசி விவகாரத்தில் தமிழ் பெண்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.

இந்த தடுப்பு ஊசியைத் தனியார் மருத்துவமனையில் போட்டால் குறைந்தது 300 ரிங்கிட் மேல் செலவாகும். தேசிய புற்று நோய் கழகம் இலவசமாக இந்த தடுப்பு ஊசியை வழங்குகிறது. 

தமிழ் பெண்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் குணராஜ் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset