நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழில்முனைவோருக்கு அரசு எப்போதும் நிதி உதவி செய்கிறது: டத்தோ ரமணன்

சுங்கைபூலோ:

நாட்டில் உள்ள தொழில்முனைவோருக்கு அரசு எப்போதும் நிதி உதவி செய்து வருகிறது.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் இதனை கூறினார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் சொந்த தொழில் செய்பவர்களுக்கு உதவிகள் தேவைப்படுமாயின் சுபாங் ஸ்டார் எவனியுவில் உள்ள தனது அலுவலகத்தை நாடலாம்.

தெக்கூன் கடன் உதவி பெற வேண்டும் என்றால் 17 பாரங்கள் தேவை. ஆனால் தற்போது 4 பாரங்கள் மட்டும் போதும். 

சொந்த தொழில் செய்வதற்கான எஸ்.எஸ்.எம் பதிவு, வங்கி கணக்கறிக்கை, அடையாள அட்டை நகல், வியாபாரம் செய்யும் கடையின் படம் ஆகிய 4 ஆவணங்கள் போதுமானது என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆவணங்கள் இருக்குமாயின் தெக்கூன், அமானா இக்தியார் ராக்யாட்டிலும் கடன், உதவிகள் கிடைக்கும் என்றார் அவர்.

இதனிடையே சுங்கை பூலோவில் 300 வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்ல தேவைப்படும் கல்வி உபகரணங்களை அவர் வழங்கி பேருதவி புரிந்தார்.

பேங்க் ரக்யாத் ஒத்துழைப்புடன் இப் பொருட்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset