நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தூக்கி எறியப்பட்ட சிசு மரணம்

பிரிக் பீல்ட்ஸ்:

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஆண் சிசு ஒன்று மரணமடைந்தது.

சம்பந்தப்பட்ட சிசு தொப்புள் கொடியுடன் இருந்தது என்று பிரிக்பீல்ட்ஸ் போலீஸ்படைத் தலைவர் கூ மாஸ்ரிமான் கூறினார்.

ஸ்ரீ பெட்டாலிங்கைச் சுற்றியுள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதாக நம்பப்பட்டு அச்சிசு இறந்து கிடந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு பிற்பகல் 2.30 மணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்டதால் அந்த சிசுவின் தலையின் ஒரு பகுதி உடைந்த நிலையில் காணப்பட்டதாக அவர் கூறினார்.

ஆண் குழந்தை இன்னும் தொப்புள் கொடியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர் இப்போது தான் பிறந்தார் என்று நம்பப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் போலீசார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset