நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வான் சைபுல் விவகாரத்தில் எம்ஏசிசி தலையிட வேண்டியது இல்லை: பெர்சத்து

கோலாலம்பூர்:

மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகள் அல்லது பேச்சுகளில் எம்ஏசிசி தலையிட முடியாது.

பெர்சத்து கட்சியின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஆதரவு தருவதற்காக கையூட்டு வழங்க முயற்சிக்கப்பட்டதாக தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் மக்களவையில் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை அமர்வில் பேசும் போது அல்லது விவாதம் செய்யும் போது வழக்குத் தொடுப்பதில் இருந்து விலக்கு, சலுகைகள் உள்ளன.

இதனை எம்ஏசிசி புரிந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் சொல்வதில் எம்ஏசிசி தலையிட முடியாது.

ஏனென்றால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் செயல் அவர்களிடம் உள்ளது என்று ஹம்சா ஜைனுடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset