நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய தணிக்கை வாரியத்திற்கு ஆயுதப்படை நிதி வாரியம், பெல்டா விளக்கமளிக்க வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

ஆயுதப்படை நிதி வாரியம்,  பெல்டா ஆகியவை தேசிய தணிக்கை வாரியத்திற்கு உரிய விளக்கத்தை தர வேண்டும்.

2022இல் அதன் செயல்திறன் குறித்த முழு அறிக்கையை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டார்.

புத்ராஜெயா மாவட்ட காவல்துறை தலைமையக சூராவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

முழு அறிக்கையை சமர்ப்பிக்க இரண்டு வாரியங்களுக்கும் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகக் கூறினார்.

உண்மையில் நாங்கள் ஏற்கனவே ஒரு அறிவிப்பை வழங்கியுள்ளோம்.

எனவே இது 2022 தணிக்கையில் இருந்து வந்தாலும் சம்பந்தப்பட்ட இரு வாரியங்களும் முழு விளக்கத்தை அளிப்பார்கள்.

பலவீனங்கள் பற்றிய முழுமையான அறிக்கையை சரி செய்ய வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது என்று  பிரதமர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset