நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எனது வளர்ச்சிக்கு வித்திட்டவர் துன் சாமிவேலு: டான்ஶ்ரீ நடராஜா

கோலாலம்பூர்: 

எனது வளர்ச்சிக்கு வித்திட்டவர் துன் சாமிவேலு என்று ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ நடராஜா கூறினார்.

துன் சாமிவேலுவின் 88ஆவது பிறந்தநாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,

செந்தூலைச் சேர்ந்த நான் 17 வயது முதல் துன் சாமிவேலுவுடன் பயணித்து வருகிறேன்.

அவருடன் இணைந்த பயணித்தவர்களுக்கு தான் அவரை பற்றி தெரியும்.

அவ்வகையில் துன் சாமிவேலு மிகச் சிறந்த தலைவர். எல்லா சூழ்நிலையில் இந்திய சமுதாயத்தை அரவணைத்து சென்றார்.

குறிப்பாக எனது வளர்ச்சிக்கு வித்திட்டவரும் எனக்கு துணையாக இருந்தவரும் அவர்தான் என்று டான்ஶ்ரீ நடராஜா கூறினார்.

* டத்தோஶ்ரீ தேவமணி

இந்திய சமுதாயம் கல்வியில் சாதிக்க வேண்டும் என்பதில் துன் சாமிவேலு தனிக் கவனம் செலுத்தினார்.

இதன் அடிப்படையில் தான் எம்ஐஇடி, டேஃப் கல்லூரி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் என பலவற்றை நிறுவினார்.

குறிப்பாக மஇகாவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற அடிப்படையில் பல உருமாற்றங்களை அவர் மேற்கொண்டார்.

அவருடன் இணைந்து பணியாற்றியதில் எனக்கு பெருமை என்று முன்னாள் துணையமைச்சர் டத்தோஶ்ரீ தேவமணி  கூறினார்.

* டத்தோ டி. மோகன் 

துன் சாமிவேலுவிடம் திட்டு வாங்காதவர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் திட்டிய பின் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அனைத்து வழிகளையும் அவர் காட்டுவார்.

அதன் அடிப்படையில் அரசியலில் எனக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இருந்துள்ளார்.

ஒரு கட்சியைச் சேர்ந்த மாண்புமிகுகள் உறுப்பினர்கள் சொஸ்மாவில் கைது செய்யப்பட்டனர்.

அதுவே துன் சாமிவேலுவாக இருந்தால் அப்படி ஏதும் நடந்திருக்காது.

காரணம் கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் பாதுகாப்பவர்தான் துன் சாமிவேலு என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset