செய்திகள் மலேசியா
மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 27ல் நடைபெறும்: டத்தோ ராஜா
கோலாலம்பூர்:
மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைமை செயலாளர் டத்தோ ஆர்.டி. ராஜா கூறினார்.
இவ்வாண்டு மஇகாவின் தேர்தல் ஆண்டு என்பதால் அனைத்து பிரிவுகளிலும் தேர்தல் கட்டம் கட்டமாக நடைபெறவுள்ளது.
முதல் கட்டமாக கிளைகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறவுள்ளது.
143 தொகுதிகளில் உள்ள 4 ஆயிரம் கிளைகள் இந்த வேட்புமனுவில் உட்படுத்தப்படவுள்ளன.
இதைத் தொடர்ந்து கிளைகளுக்கான ஆண்டுக் கூட்டம் வரும் மார்ச் 16ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
குறிப்பாக கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனுதாக்கல் வரும் மார்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஒருவேளை தலைவர் பதவிக்கு போட்டி என்றால் அதற்கான தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து இதர பிரிவுகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று டத்தோ ராஜா செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 5:58 pm
நராதிவாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மலேசியர்கள் காயமடைந்தனர்
May 7, 2024, 5:52 pm
கோல குபு பாரு இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்: தேர்தல் ஆணையம்
May 7, 2024, 5:10 pm