நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் பூங்கா ராயாவின் 36 குடும்பங்களுக்கு  சிலாங்கூர் கூ வீடுகள்: பாப்பாராயுடு

ஷாஆலாம்:

சுங்கை பூலோ கம்போங் பூங்கா ராயாவில் உள்ள மொத்தம் 36 குடும்பங்கள் சிலாங்கூர் கூ வீடுகளுக்கான கடிதங்களை பெறுவார்கள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.

அலாம் பெர்டானா, புன்சாக் அலாம் ஆகிய இடங்களில் 42,000 ரிங்கிட் மதிப்புள்ள குடியிருப்பு வழங்கப்படும்.

இது கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் அப்பகுதியில் வசிப்பவர்களின் தீர்வுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மாநில அரசின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.

 நாங்கள் குடியிருப்பாளர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினோம். சிலாங்கூர் வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் வாரியம் மூலம் மொத்தம் 36 குடும்பங்கள் சிலாங்கூர் கூ வீடுகளுக்கு விண்ணப்பித்துள்ளன.

திவால் ஆகாமல் இருப்பது, கடன் ஒப்புதல் பெறுவது போன்ற பல அளவுகோல்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.

பெற்றோர்கள் இறந்துவிட்டால் அவர்களின் பிள்ளைகள் இந்த வீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே, விண்ணப்பம் செய்யாத குடும்பங்கள் அல்லது வாரிசுகள் உடனடியாக பதிவு செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset