நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண்களை மதித்து அன்புடன் போற்றுவோம்: அரசியார் ராஜா ஜாரித் சோஃபியா வாழ்த்து 

பெட்டாலிங் ஜெயா:

பெண்களை மதித்து அவர்களை மென்மையுடனும் அன்புடனும் அரவணைக்க வேண்டும் என்று அரசியார் ராஜா சாரித் சோஃபியா தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

மலேசியாவில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் 2 சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை ராஜா ஜாரித் சோபியா சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தின் வாயிலாகத் தெரிவித்தார். 

பெண் சமூகத்தை ஒவ்வொருவரும் மதித்து அவர்களை மென்மையுடனும் அன்புடனும் நடத்த வேண்டும். அவர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதில் பெரும் பங்கினை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மனைவிகள், தாய்மார்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பல்வேறு பொறுப்புகளை சுமந்து வரும் அனைத்துப் பெண்களுக்கும் தனது வாழ்த்துகளை அரசியார் தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், பெண் சமூகத்தின் உரிமைகளுக்காகப் போராடவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு மகளிர் தினம்  'Wanita Dijulang Negara Gemilang' என்ற கருப்பொருளோடு கொண்டாடப்படுகின்றது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset