நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விவசாயிகளை விரோதிகளைப்போல் மோடி நடத்துகிறார்: காங்கிரஸ் தலைவர்

புது டெல்லி:

உரிமைகளைக் கேட்கும் விவசாயிகளை விரோதிகள் போல பிரதமர் நரேந்திர மோடி அரசு நடத்துகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி செல்வோம் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்களை பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ரயில்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் மூலம் வரும் 6ம் தேதி தில்லி வந்தடைய பஞ்சாப் விவசாய சங்கத்தினர் கூறியுள்ளனர்.

வரும் 10ம் தேதி தேசிய அளவிலான ரயில் மறியல் போராட்டத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், சில குறிப்பிட்ட பெரு முதலாளித்துவ நண்பர்கள் பலனடைய வேண்டும் என்பதற்காக, விவசாயிகளின் நலன்களை மோடி அரசு தொடர்ந்து தியாகம் செய்து வருகிறது.

உரிமைகளை கேட்டு போராடும் விவசாயிகளை விரோதிகள் போல மோடி அரசு நடத்துகிறது என்று கார்கே  தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset