நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸாவில்  போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலுக்கு நெருக்கடி தருவோம்: கமலா ஹாரிஸ் 

வாஷிங்டன்:

காஸாவில்  போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலுக்கு அளித்து வரும் நெருக்கடியை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியதாவது:
தொடர் தாக்குதலால் காஸா பகுதி மக்கள் அனுபவித்து வரும் மிகப் பெரிய துயரங்களையும் மறுக்க முடியாது. அதனை கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அடுத்த 6 வாரங்களுக்கு அந்தப் போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும். இதனைப் பயன்படுத்தி, ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கவும், காஸா பகுதி மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும் முடியும்.

பாலஸ்தீன மக்களின் கௌரவம், சுதந்திரம், சுயாட்சி உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுதான் இஸ்ரேலுக்கு உண்மையான பாதுகாப்பை வழங்கும்.

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயார் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. இதற்கான வரைவு ஒப்பந்தமும் தயார் நிலையில் உள்ளது என்றார் கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸின் இந்தக் கருத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரமீளா ஜெயபால் வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஸாவில் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா இவ்வளவு உறுதியான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது இதுவே முதல்முறையாகும்' என்றார்.

இஸ்ரேல் இராணுவம் தரை, வான், கடல் வழியாக பலஸ்தீனுக்குள் நுழைந்து பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 30,000க்கும்  மேற்பட்டவர்களை படுகொலை செய்தனர். 

ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

எனினும், போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset