செய்திகள் இந்தியா
ஸ்பெயின் பெண்ணின் அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா; இது இந்திய தேசத்தின் அவமானம்: மனோ தங்கராஜ்
புதுடில்லி:
66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதியர், வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா? என பிரதமர் மோடியிடம், அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி, இந்தியாவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தும்கா மாவட்டத்தில் குறுமுகத் என்ற பகுதிக்கு இருவரும் சுற்றுலா சென்றனர்.
அங்கு இரவு தற்காலிக கூடாரம் அமைத்து இருவரும் தங்கியிருந்தனர். நள்ளிரவில் அங்கு சென்ற 7 பேர் கொண்ட கும்பல், கணவரை அடித்து காயப்படுத்தி விட்டு, இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார், இருவரையும் மீட்டு தும்கா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்துள்ளதாகவும், மீதமிருக்கும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெளிநாட்டு தம்பதிக்கு ஏற்பட்ட இந்த கொடூர சம்பவத்தை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டித்துள்ளா்.
இதுகுறித்து வெளிநாட்டு தம்பதி வேதனையுடன் பேசும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், 66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதியர் வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா?.
இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர் மோடி பேசும் கலாச்சார பெருமையா? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm