செய்திகள் இந்தியா
வாகன உற்பத்திக்கான லேத்தை ஏவுகணை என்று இந்தியா பொய் சொல்லி பறிமுதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானுக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட வாகன உற்பத்திக்கான லேத் இயந்திரத்தை இந்தியா பொய்யான காரணம் கூறி பறிமுதல் செய்துள்ளது என அந்த நாடு குற்றம்சாட்டியுள்ளது.
சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கி வந்த சரக்குக் கப்பலில் அணுசக்தி திட்ட ஏவுகணை தயாரிப்புக்கு பயன்படுத்தக் கூடியதாக இயந்திரம் உள்ளதாக கூறி மும்பை துறைமுகத்தில் இந்தியா நிறுத்தி பறிமுதல் செய்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாகிஸ்தானின் வாகன உற்பத்தி துறைக்கு உதிரி பாகங்களை விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட வர்த்தக லேத் இயந்திரத்தை இந்தியா பொய் சொல்லி பறிமுதல் செய்துள்ளது.
இந்த இறக்குமதிக்கான அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி வழிமுறைகளின் மூலம் வெளிப்படையாக நடைபெற்றுள்ளன.
இந்தியாவின் பறிமுதல் நடவடிக்கை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am
மக்களவைத் தேர்தல்: 88 தொகுதிகளில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது
April 26, 2024, 7:34 pm
மணிப்பூர் வன்முறை, பிபிசி அலுவலக சோதனைக்கு அமெரிக்கா விமர்சனம்: இந்தியா எதிர்ப்பு
April 26, 2024, 7:24 pm
சொத்து வாரிசுரிமை வரியை ராஜீவ் காந்தி ஒழித்தது ஏன்?: மோடி அவதூறு கருத்து
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm