செய்திகள் மலேசியா
36 தமிழ்ப்பள்ளிகள் , 16 ஆலயங்களுக்கு இந்து கலைக்களஞ்சிய நூல்கள் வழங்கப்பட்டன
பெட்டாலிங் ஜெயா:
பெட்டாலிங் ஜெயா மலேசிய திருமுருகன் திருவாக்கு திருப்பீடத்தின் தவதிரு பாலயோகி சுவாமிகளின் ஆசியோடு இந்து சமய கருத்தரங்கமும் தமிழ்ப்பள்ளிகளுக்கு இந்து கலைக்களஞ்சியங்களை இலவசமாக வழங்கும் பெருவிழா பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தமிழில் அமைந்த இந்து கலைக்களஞ்சிய நூல்கள் இன்று 36 தமிழ்பள்ளிகளுக்கும் 16 கோவில்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்து கலைக்களஞ்சிய நூல்கள் 4,200 பக்கத்தில் 12 பிரதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று திருப்பிடத்தின் செயலாளர் கண்ணா தெரிவித்தார்.
தவத்திரு பாலயோகி சுவாமிகள் மேற்கொண்ட அயராத முயற்சியின் பலனாக இந்த கலைக் களஞ்சிய நூல்கள் வெளிவந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
இந்த கலைக் களஞ்சிய நூல்கள் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு சிறப்பு வருகை புரிந்து இந்து கலைக்களஞ்சிய நூல்களை தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்களிடம் எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2024, 7:16 pm
ஒப் குளோபலில் கைதான மற்றொரு மதராஸா உதவி ஆசிரியருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு
September 20, 2024, 5:32 pm
நவம்பர் மாதம் வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது: மெட்மலேசியா
September 20, 2024, 5:21 pm
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு; அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும்: விஜய் அறிவிப்பு
September 20, 2024, 5:20 pm
சிறுவர்களின் திறனை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் நோக்கில் பாடல் திறன் போட்டி: குணராஜ்
September 20, 2024, 5:18 pm
68 அரசு ஊழியர்களின் பாரிஸ் பயணம் ரத்து செய்யப்பட்டது: பிரதமர்
September 20, 2024, 4:26 pm
மாற்றுத் திறனாளி ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கு முடிவடையவில்லை: பிரதமர் அன்வார்
September 20, 2024, 4:24 pm