நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஜார்க்கண்டில் ஸ்பெயின் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: துல்கர் சல்மான் வருத்தம்

கொச்சின்:

ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற ஸ்பெயின் பெண்ணை ஏழு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், இந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வேதனையடைந்தேன். 

சமீபத்தில் இருவரும் கோட்டயத்தில் உள்ள எனது உறவினர்கள் வீட்டில் விருந்துக்கு வந்திருந்தனர். யாருக்கும் இதுபோன்ற நிலை எங்கும் வரக்கூடாது என பதிவிட்டிருந்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்து தெரிவித்தனர். 

அந்த வீடியோவில், இது யாருக்கும் நடக்கக்கூடாது என்று நாங்கள் நினைக்காத ஒன்று எங்களுக்கு நடந்துள்ளது. 

நான் ஏழு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். நாங்கள் தாக்கப்பட்டு, எங்களிடம் இருந்து சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. 

எங்களிடம் இருந்தும் அனைத்தையும் அவர்கள் திருடவில்லை, அந்த நேரத்தில் அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்யவே விரும்பினர் என்று அப்பெண் உருக்கமாக கூறியிருந்தார்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset