நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி

புது தில்லி:

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 195 பாஜக வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை அக்கட்சி வெளியிட்டது.

இதில் 34 ஒன்றிய அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

உள்துறை அமைச்சர் அமித் ஷா -காந்திநகர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் - லக்னோ,  ஸ்மிருதி இரானி - அமேதி தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹானஅ, திரிபுரா முன்னாள் முதல்வர் விப்லவ் தேவ் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அட்டிங்கல் தொகுதியில் மத்திய இணையமைச்சர் வி.முரளீதரன், திரிச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி,

காங்கிரஸின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணிக்கு பத்தனம்திட்ட தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

தமிழக தொகுதிகள் அறிவிக்கப்படவில்லை. மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகளுக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset