செய்திகள் உலகம்
WTO மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராக கருத்து: தாய்லாந்து தூதர் நீக்கம்
அபுதாபி:
உலக வர்த்தக அமைப்பு WTO மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த தூதரை அப் பதவியில் இருந்து தாய்லாந்து அரசு நீக்கியது.
WTO அமைச்சர்கள் மத்தியில் நடைபெற்ற கூட்டம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் தாய்லாந்து நாட்டின் தூதர் பிம்சனாக் வோன்கொர்போன், அரிசி ஏற்றுமதி சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து இந்திய அரசு அரிசியை கொள்முதல் செய்கிறது என்றார்.
இதற்கு இந்திய எதிர்ப்பை தாய்லாந்து அரசு மற்றும் உலக வர்த்தக அமைப்பின் தலைவர், அமைப்பின் வேளாண் குழு தலைவராக உள்ள கென்யா, ஐக்கிய அரபு அமீரகத்திடம் தெரிவித்தது.
ஆலோசனை கூட்டங்களில் தாய்லாந்து பிரதிநிதிகள் பங்கேற்ற அமர்விலும் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்தது.
இந்நிலையில், உலக வர்த்தக அமைப்புக்கான தாய்லாந்தின் தூதர் பிம்சனாக்கை அப்பொறுப்பில் இருந்து நீக்குவதாக தாய்லாந்து அரசு அறிவித்ததுள்ளது.
இந்தியாவின் அரிசி கொள்முதல் திட்டம் குறித்து அபத்தமான கருத்தை தெரிவித்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது பேச்சும், செயல்பாடுகளும் முறையாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm