நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜக ஆட்சி தொடர்ந்தால் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.2,000: மம்தா பானர்ஜி

கொல்கத்தா:

பாஜகவின் ஆட்சி தொடர்ந்தால் வந்தால் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.2,000ஆக உயரும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி பேசுகையில்,
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு அத்தியாவசியப் பொருள்களின் விலை அனைத்தும் வேகமாக அதிகரித்து வருகிறது.

எரிவாயு சிலிண்டர் விலை ஏற்கெனவே ரூ.1,100க்கு மேல் அதிகரித்தது. தேர்தலைக் கருத்தில் கொண்டு இப்போது ரூ.1000க்கு கீழ் விலையை வைத்துள்ளனர்.

பாஜக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் சிலிண்டர் விலை ரூ.2,000 வரை உயர வாய்ப்புள்ளது. அதன் பிறகு ஏழை, எளிய மக்கள் அனைவரும் மீண்டும் விறகு அடுப்பை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset