![image](https://imgs.nambikkai.com.my/IMG-20240301-WA0376.jpg)
செய்திகள் மலேசியா
திறன்களை உயர்த்துவதற்கான புதிய பயிற்சித் திட்டங்களுக்கு ஒரு மாத காலக்கெடு: பிரதமர்
ஷாஆலம்:
திறமையான பணியாளர்களை உருவாக்குவதற்கான திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய பயிற்சி திட்டங்களை உருவாக்க வேண்டும்.
இதற்கு சொக்சோவுக்கும் மனிதவள அமைச்சுக்கும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசியத் தொழிலாளர்களின் திறன்களை அனைத்து வகையிலும் மேம்படுத்த வேண்டும்.
குறிப்பாக தொழில்துறை நிறுவனங்களின் அதிக தேவை உள்ள பகுதிகளில், அதிநவீன வேலை சந்தையில் நாடு போட்டியிடுவதற்கு உதவும்.
முன்பு செய்ததை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு சொக்சோவுக்கும் மனிதவள அமைச்சுக்கும் ஒரு மாதம் அவகாசம் தருகிறேன்.
மனிதவளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் இந்த திட்டத்தை அமைச்சரவையின் பரிசீலனை, ஒப்புதலுக்காக முன்வைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
ஷாஆலமில் வேலை வாய்ப்பு கண்காட்சியை தொடக்கி வைத்த பிரதமர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 4:03 pm
டிக் டாக்கால் இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கிறது: மஇகா மகளிர் அணி வேதனை
July 27, 2024, 2:09 pm
போலீஸ் சோதனையில் தப்பிச் செல்ல முயன்ற தம்பதியர் கைது
July 27, 2024, 1:43 pm
ஜொகூரில் அடுத்தாண்டு பைலட் பள்ளிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது: ஓன் ஹஃபிஸ் காசி
July 27, 2024, 1:03 pm
உணர்வு அரசியலைச் சமாளித்து, சேவையை முன்னெடுங்கள்: டத்தோஶ்ரீ ஜாஹித்
July 27, 2024, 12:49 pm
முன்னாள் அமைச்சர் Siti Zaharah Sulaiman-னின் குடும்பத்திற்கு ஜாஹித் இரங்கல்
July 27, 2024, 11:05 am
பத்தாண்டில் 1,600 போலிஸ் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கம்
July 27, 2024, 10:30 am