நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோல்ட்மேனுடனான 1 எம்டிபி சொத்து மீட்பு ஒப்பந்தம் விரிவாக இல்லை: ஜொஹாரி

புத்ராஜெயா:

கோல்ட்மேனுடனான 1 எம்டிபி சொத்து மீட்பு ஒப்பந்தம்  விரிவாக இல்லை  என்று அதன் சொத்து மீட்பு பணிக் குழுவின் தலைவர் டத்தோஶ்ரீ   ஜொஹாரி அப்துல் கனி கூறினார்.

கடத்த 2020ஆம் ஆண்டு கோல்ட்மேன் சாட்ஜ், மலேசிய அரசாங்த்துடன் ஒப்பந்தம் நடந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் முழுமையாகவும் தெளிவாகவும் இல்லை.

இதனால் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்து மீட்பு உத்தரவாதத்தை மலேசிய அரசாங்கத்திற்குச் செலுத்த விரும்பாததை நிறுவனம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த விஷயம் ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்றார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் கண்ட தீர்வின் வாயிலாக 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டன.

மேலும் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்ட சொத்துக்களை மீட்டெடுப்பதாக  உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் ஒப்பந்தம் விரிவாக இல்லை என்பதால் சிக்கலாக உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset