நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை விடுவிக்குமாறு மொஹைதின் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு

புத்ராஜெயா:

ஜானா விபாவா திட்டத்துடன் தொடர்புடைய நான்கு அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேசிய கூட்டணி தலைவர் டான்ஶ்ரீ  மொஹைதின் யாசின் கூட்டரசு நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்துள்ளார்.

சேட்டன் ஜெத்வானி சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் நேற்று நாட்டின் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு நோட்டீஸ் தாக்கல் செய்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று மொஹைதீனின் வழக்கறிஞர் கூறினார்.

அவரது விண்ணப்பத்தை தெளிவற்ற, குறைபாடுள்ளது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில மேல் முறையீடு செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று அவரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset