நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உயிருக்கு பயந்து பாஜகவுக்கு கட்சி மாறி வாக்களிப்பு: அகிலேஷ் யாதவ்

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜவாதி எம்எல்ஏக்கள் 7 பேர் உயிருக்கு பயந்து  கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் 10 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இதில் பாஜக 8 இடங்களையும் சமாஜவாதி 2 இடங்களையும் கைப்பற்றின. இத்தேர்தலில் சமாஜவாதி எம்எல்ஏக்கள் 7 பேர் கட்சி மாறி பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், 7 எம்எல்ஏக்களுக்கும் பாஜக அரசிடமிருந்து எந்த அளவு நெருக்கடி தரப்பட்டிருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

இந்த எம்எல்ஏக்களில் சிலர் தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், சிலர் அழுத்தத்துக்குப் பணிந்தும், சிலர் தங்களுக்கு "மரியாதை' கிடைக்கும் என்றும் கட்சி மாறி வாக்களித்துள்ளனர் என்றார் அவர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset